News April 1, 2025
கோபால சுவாமி பங்குனி உத்திர நிகழ்ச்சிகள் அறிவிப்பு

பாளையங்கோட்டையில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு அழகிய மன்னர் ராஜகோபால சுவாமி திருக்கோயில் விழாக்களில் முக்கிய விழாவான பங்குனி உத்திரத் திருவிழா ஏப்.3 அன்று தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஏப்.13 வரை திருவிழா நடைபெற உள்ளது. அதற்கான நிகழ்ச்சி விபரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஏப்.3 அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. ஏப்.12 அன்று தேரோட்டம் வைபவம் நடைபெற உள்ளது.
Similar News
News August 5, 2025
JOB ALERT: நெல்லை கூட்டுறவு வங்கியில் வேலை

நெல்லை இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கும் மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். நெல்லைக்கு குறிப்பிட்ட அளவு காலியிடங்கள் உள்ளன. ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <
News August 5, 2025
நெல்லையில் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அரசு சார்பில் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண்கள் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இதற்கு www.tnuwwb.tn.gov.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெருமாள்புரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT
News August 5, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன், தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும் இன்று (ஆக.04) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.