News March 20, 2024
கோத்தகிரியில் 7 பேருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்

கோத்தகிரி பகுதியில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோத்தகிரி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் குடிபோதையில் வாகனத்தை இயக்கிய 7 பேருக்கு மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோத்தகிரி மாஜிஸ்திரேட் வனிதா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
Similar News
News October 25, 2025
2000 பள்ளி மாணவர்கள் புத்தகம் வாங்க இலவச கூப்பன்

நீலகிரி மாவட்டத்தில் 4வது புத்தகத் திருவிழாவினை, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர், அவர் புத்தக அரங்குகளைப் பார்வையிட்டார். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் 2000 பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.150 மதிப்பிலான இலவசக் கூப்பன்களை வழங்கும் அடையாளமாக, 10 மாணவ, மாணவியர்களுக்குப் புத்தகங்களை வழங்கினார்.
News October 24, 2025
அறிவித்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்!

நீலகிரி மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும், வார்டு உறுப்பினர் தலைமையில் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டத்தில் குடிநீர் , திடக்கழிவு, தெரு விளக்கு, சாலை போன்றவைகளில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
நீலகிரி: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

நீலகிரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <


