News April 15, 2025
கோடை காலத்தில் குடிக்க வேண்டிய பானங்கள்

சிவகங்கை மக்களே கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த பானங்களை மட்டும் அருந்துங்கள். இளநீர், மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர் பானங்களை அருந்த வேண்டாம். *எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க*
Similar News
News April 16, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

சிவகங்கை மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 55 மாற்றுத்திறனாளிகள் தம்பதிகளுக்கு ரூபாய் 21 லட்சம் திருமண உதவித்தொகையுடன் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படிக்காத மாற்றுத்திறனாளி தம்பதிக்கு 8 கிராம் தங்க நாணயமும், திருமண உதவித்தொகையாக 25,000 வழங்கப்படும், தகுதியுடையவர்கள் பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
News April 15, 2025
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற சமுதாய அமைப்புகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருதிற்கு வரும் 25.04.2025-ஆம் தேதிக்குள் அந்தந்த வட்டாரங்களிலுள்ள குறிப்பிட்ட அலகுகளில் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விபரங்களுக்கு திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, சிவகங்கை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
News April 15, 2025
சிவகங்கை: கொலையில் 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் இருப்பான்பூச்சி கிராமத்தில் சரத்குமார் அவரது நண்பர் சிவசங்கருடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு டூவீலரில் வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் சரத்குமார் பலியானார். சிவசங்கர் காயமடைந்தார். கொலை செய்யப்பட்ட சரத்குமாரின் உறவினர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய விக்ரம், ஜனா, தவசகுடிபிரபு, சிவா 4 பேரை போலீசார் கைது கைது செய்தனர்.