News October 31, 2025

கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

image

திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு நிலத்தகராறு காரணமாக செஞ்சி அருகே குறிஞ்சிப்பை கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் சேகர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் கிருஷ்ணன் அரவிந்தன் ஏழுமலை ஆகிய மூவருக்கும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆழ்ந்த நிலை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்

Similar News

News October 31, 2025

விழுப்புரம்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

விழுப்புரம்: நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

image

விழுப்புரம் மாவட்டத்தில் மழையின் காரணமாக கடந்த அக்.22அன்று விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடுசெய்யும் விதமாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை நவ-01 பணி நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

News October 31, 2025

கலை, கலாசார மேம்பாடு: விண்ணபங்கள் வரவேற்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கலை, கலாசாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும் / ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!