News April 18, 2025

கொலை வழக்கில் முக்கிய பெண் குற்றவாளி கைது

image

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.

Similar News

News August 7, 2025

இளம் வில்லுப்பாட்டு கலைஞரை கௌரவித்த கலெக்டர்

image

நெல்லை பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி பல்வேறு கோயில்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஆன்மீக வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தி பிரபலமாகி வருகிறார். சிறு வயது முதலே வில்லுப்பாட்டு கலையை ஆர்வமாக மேற்கொண்டு வரும் கலைஞர் மாதவியை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று அலுவலகத்திற்கு அழைத்து பொன்னாடை அணிவித்து கௌரவித்து கலையை சிறப்பாக மேற்கொண்டு வருவதற்கு பாராட்டினார்.

News August 7, 2025

நெல்லையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

திருநெல்வேலி மாவட்டத்தின் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வரும் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதில் 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்த மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

நெல்லை: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

image

நெல்லை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!