News February 16, 2025

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

image

அரக்கோணம் போலீசார் நேற்று சாலை பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சுற்றி கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரக்கோணம் அடுத்த வேடல் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (46). என்பதும் கொலை வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து செல்வராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 25, 2025

ராணிப்பேட்டை இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News August 25, 2025

ராணிப்பேட்டையில் நாளை மின் நிறுத்தம்

image

ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 25) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி.மோட்டூர், ஜெயராமன் பேட்டை பழைய ஆற்காடு சாலை காந்திநகர் மேல் புதுப்பேட்டை பிஞ்சு அல்லிக்குளம் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News August 24, 2025

இரா.பேட்டை: விநாயகர் சதுர்த்தி குறித்து கூட்டம்

image

வருகின்ற 27.08.2025 அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இருந்தனர். மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

error: Content is protected !!