News October 26, 2024
கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பழைய சருகணி ரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவரை முன்விரோதம் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு தேவகோட்டையைச் சேர்ந்த முருகன், கண்ணதாசன் ஆகியோர் அறிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்ததில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
சிவகங்கை: BSNL ல் ரூ.50,000 சம்பளத்தில் வேலை அறிவிப்பு.!

சிவகங்கை மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் மார்ச் 7க்குள் இங்கு <
News February 5, 2026
சிவகங்கை: சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமானது, வருகின்ற 7.2.2026 அன்று கல்லல் வட்டாரத்திற்குட்பட்ட குன்றக்குடி, தருமைக் கயிலைக் குருமணி (DKG) மேல்நிலைப்பள்ளியில் மற்றும் கண்ணங்குடி வட்டாரத்திற்குட்பட்ட டி.சிறுவனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
மானாமதுரை: பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.!

மானாமதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி, மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிப்.2 ம் தேதி, செம்பராயனேந்தல் ஆற்றுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பதினெட்டான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் (20), மாணவியை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான புகாரில், மானாமதுரை போலீசார் சந்தோஷை தேடி வருகின்றனர்.


