News April 17, 2024
கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு வாய் தகராறு காரணமாக சுகதேவ்(29) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கொலை குற்றத்தில் ஈடுபட்ட செல்வம் அரவிந்த் பாலகுரு சிவசாமி சிவகுரு ஆகிய ஐவருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ. 2000 அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்
Similar News
News October 18, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் நேற்று(அக்.17) இரவு 11 மணி முதல், இன்று(அக்.18) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
மயிலாடுதுறை: விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாசற்ற தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வழங்கினார். உடன் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
News October 17, 2025
மயிலாடுதுறை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா ?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <