News February 18, 2025

கொலைக்கு உடந்தையாக இருந்த காதலி உட்பட 3 பேர் கைது

image

உருளையன்பேட்டை திடீர் நகர் ஸ்ரீதர் மகன் தேவா (எ) தேவக்குமார், மூலக்குளம் ஜெ.ஜெ நகர் சேர்ந்த ஆதி (எ) ஆதித்யா ஆகியோர் கடந்த 14ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த ரவுடி சத்யாவின் காதலி வம்பாகீரப்பாளையம் சேர்ந்த சுமித்ரா, பெரியார் நகரை சேர்ந்த ஆப்ரகாம், டிவி நகரை சேர்ந்த அரிஷ் பல்லாஸ் ஆகிய மூவரை பெரியக்கடை போலிசார் இன்று கைது செய்தனர்.

Similar News

News September 1, 2025

புதுச்சேரி: துணை தாசில்தார் தேர்வு

image

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 30 துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த மே 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இப்பணிக்கு மொத்தம் 37,349 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் போட்டித்தேர்வு 101 தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மையங்களில் தொடங்கி நடைபெற்றது. இத்தேர்வினை 37,349 பேர் எழுதினார்கள்.

News September 1, 2025

புதுவையில் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் மேக வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க எச்சரிக்கை வீடுகளை விட்டு வெளியேறும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 31, 2025

புதுச்சேர: புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சாதனங்கள் (VVPATs), புதுச்சேரிக்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளன. ரெட்டியார்பாளையத்தில் அமைந்துள்ள தேர்தல் துறை அலுவலக வளாகத்தில் உள்ள EVM பாதுகாப்பு அறையில் தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!