News April 29, 2025
கொம்பன் காளையை கண்டுபிடித்தால் ரூ.30 ஆயிரம்

கண்டரமாணிக்கத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிட்ட கொம்பன் காளை கே.வலையப்பட்டியில் பிடி கயிறுடன் சென்ற நிலையில் காளையை காணவில்லை, கொம்பன் என்று கூப்பிட்டால் ஓடிவரும் காளையை கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என காளையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 9326506153, 7094924233, 8939258484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 29, 2025
கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல்

தொழிலாளர் தினம் (01.05.2025) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை, ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனவே, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
தமிழ் கவிஞர் தூணிற்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒக்கூர் ஊராட்சியில் இன்று (29.04.2025) தமிழ்க்கவிஞர் நாளையொட்டி, சங்க கால நல்லிசைப் புலவர் ஓக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ச.சீதாலெட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
News April 29, 2025
சிவகங்கை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் எண்கள்

கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேளாண்மை போன்ற துறைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம்(BDO) புகார் அளிக்கலாம்.
▶️காளையார்கோவில் -7402608357
▶️சிவகங்கை -7402608368
▶️மானாமதுரை -7402608358
▶️இளையான்குடி -7402608360
▶️திருப்புவனம் -7402608359
▶️தேவகோட்டை -7402608361
▶️கண்ணங்குடி -7402608362
▶️கல்லல் -7402608375
▶️சாக்கோட்டை -7402608364
▶️திருப்பத்தூர் -7402608365
*ஷேர் பண்ணுங்க