News March 20, 2025

கொப்பரை விலை உயர்வால் உற்பத்தி நிறுத்தம்-ஆட்சியர் தகவல்

image

கொப்பரை விலை அதிகமாக உள்ளதால் குமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் இயங்கி வரும் தென்னை மதிப்பு கூட்டு மையத்தில் கடந்த மூன்று மாதமாக உற்பத்தி நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்னை மரம் கூட்டு மையத்தில் உள்ள அனைத்து அலகுகளையும் முழு அளவில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

Similar News

News September 14, 2025

குமரி மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

image

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்ற பெயரில் தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள நேரிடும். இது போன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.

News September 14, 2025

குமரி : உங்க வீட்டு பட்டாவில் திருத்தமா??

image

குமரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு குமரி மாவட்ட அதிகாரியை 04652-233213 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 14, 2025

குமரி: இந்த வாய்ப்பை MISS பண்ணாதீங்க!

image

குமரி மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து (செப்.14) இன்றே விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு. B.sc முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!