News December 26, 2025
கொத்துக் கொத்தாக இறந்த காகங்கள்; நீடிக்கும் மர்மம்

ஜோலார்பேட்டை, மண்டலவாடி ஊராட்சி பகுதிக்குட்பட்ட அரசுவட்டத்தில் உள்ள வயல் வெளியில் இன்று (டிச.26) அதிகாலையில் ஆங்காங்கே காகங்கள் இறந்து கிடந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் காகங்கள் இறந்து கிடந்ததால் யாராவது விஷம் வைத்து கொன்றார்களா? அல்லது வேறு காரணமா? என ஜோலார்பேட்டை போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 30, 2025
திருப்பத்தூர்: தம்பி மனைவியிடம் ஆபாசப் பேச்சு!

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வெங்கட் சமுத்திரம் ஊராட்சி கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவரின் மனைவி மாலதி(40). கூலித் தொழிலாளியான இவரிடம் இவரது கணவனின் அண்ணன் குமார்(55) தினசரி ஆபாசமாக பேசுவது, சண்டை போடுவது என இருந்து வந்துள்ளார். இதுகுறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் மாலதி புகாரின் பேரில் குமாரை நேற்று கைது செய்தனர்.
News December 30, 2025
திருப்பத்தூர்: கிணற்றில் கிடந்த சடலம்!

ஆதியூர் அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கவுரவம்மாள்(70). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் மாயமானார். அவரைப் பல்வேறு இடங்களில் அவர்களின் குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில், மட்றப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாகக் கிடந்த கவுரவம்மாளை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 29, 2025
இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் இன்று டிசம்பர் 29 வந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று இரவு பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தனியாக செல்லும் பொதுமக்கள் இந்த அலைபேசி எண்களை பயன்படுத்தி தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. உடனே இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க !


