News March 30, 2025

கொதிக்கும் திருவள்ளூர்

image

தமிழ்நாட்டில் கடந்த 27ஆம் தேதியில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் வெப்பம் சுட்டெரித்ததை பார்க்க முடிந்தது. அதன்படி, மதுரை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது.இந்நிலையில் திருத்தணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 100.4 டிகிரி வெயில் பதிவானதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்

Similar News

News April 1, 2025

சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

image

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

News April 1, 2025

ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

image

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.

News April 1, 2025

பெண் போல பேசி நூதன மோசடி

image

அரக்கோணத்தை சேர்ந்தவர் சத்தியநாதன், இவரிடம், 2 மாதங்களாக திருவாலங்காட்டை சேர்ந்த தினேஷ் என்பவர் பெண் போல மொபைல் போனில் பேசி பழகியுள்ளார். இதை உண்மை என நம்பிய வாலிபர் அவரை சந்திக்க வந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த தினேஷ் மற்றும் 2 வாலிபர்கள் சத்தியநாதன் தாக்கி அவரிடம் இருந்த 2,000 ரூபாயை பறித்துள்ளனர். இதுக்குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!