News October 29, 2024
கொட்டாரம் அருகே உடல் நசுங்கி பழ வியாபாரி பலி

குமரி மாவட்டம் கொட்டாரம் மேல தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பன் என்ற பகவதி(70). பழ வியாபாரியான இவர் இன்று சந்தையில் பழம் வாங்கிவிட்டு சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். கொட்டாரம் அருகே உள்ள ரவுண்டான சந்திப்பில் சென்று கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி இவர் மீது மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் சக்கரம் ஏறி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
Similar News
News August 9, 2025
குமரியில் இலவச தையல் மிஷின் APPLY பண்ணுங்க!

குமரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை 04652-235451 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.
News August 9, 2025
குமரி: பூம்புகார் படகு சேவை START..!

குமரியில், கண்ணாடி இழை பாலம் திறந்ததையடுத்து, இதுவரை 16 லட்சம் பயணிகள் குமரிக்கு வருகைதந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொருட்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில், படகு பயணம் மேற்கொள்ள ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.<
News August 9, 2025
தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர சேவை

குமரி அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று வெளியிட்ட செய்தியில், நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் வருகிற 11-ம் தேதி முதல் பதிவு, விரைவு பார்சல் தபால்களுக்கு 24 மணி நேர முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் எந்த நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் தபால் சேவை பெரும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மூன்று சீட்டு அடிப்படையில் கவுண்டர் செயல்படும் என தெரிவித்துள்ளார்.