News April 9, 2024

கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதியில் காட்டுத்தீ

image

கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதியில் காட்டடுத்தீ பற்றி எரிந்து வருகிறது. பூப்பாறை, மன்னவனூர் வனச்சரக எல்லையான பாரிக்கோம்பை வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. வெம்பாடி பகுதிக்கு காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மூலிகைச்செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகியது.

Similar News

News July 7, 2025

திண்டுக்கல்லில் பாவங்கள் போக்கி, வேலை தரும் கோவில்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் நகரில் காளஹஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலாகும். இங்கு வேண்டினால் ராகு, கேது தோஷம் நீங்கும், செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், இழந்த வேலை மீண்டும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், குழந்தை பாக்கியம் கிடைக்க கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். SHARE பண்ணுங்க!

News July 7, 2025

திண்டுக்கல்லில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 29 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974590>>தொடர்ச்சி<<>>

News July 7, 2025

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!