News December 14, 2025
கொடைக்கானல் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி!

ஈரோடு மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகவிக்னேஷ் (26), நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்குச் சென்றார். வத்தலக்குண்டு அருகே தனியார் பேருந்தை அவர் முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 1, 2026
திண்டுக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மார்ச் 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்புப் பணிக்காகக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசரக் காலங்களில் அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளன.
News March 1, 2026
திண்டுக்கல்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0451-2432817 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க
News March 1, 2026
பழனி அருகே ‘பெண் பலி’ சிற்பம் கண்டுபிடிப்பு

பழனி அருகே கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பெண் (திருநங்கை) பலி’ சிற்பத்தை ஆய்வாளர் நாராயணமூர்த்தி கண்டறிந்தார். பாழடைந்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட இச்சிற்பம், 1 திருநங்கை தனது தலையை தானே அறுத்து கடவுளுக்கு பலியிட்டு கொண்டதை சித்தரிக்கிறது. விலங்குகளை பலியிடும் வழக்கத்திற்கு மாறாக, இத்தகைய மனிதப் பலி மற்றும் திருநங்கை தொடர்பான வரலாற்றுச் சான்று தொல்லியல் ஆர்வலர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


