News May 12, 2024
கொடைக்கானல் சாலை தற்காலிகமாக மூடல்

பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ள அடுக்கம் பகுதியில் இன்று (12.05.24) பெய்த கனமழையால் நெடுஞ்சாலை துறையினரால் கட்டப்பட்டதடுப்புச் சுவர் சாலையில் விழுந்து வாகனங்கள் செல்ல இயலாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக செலும்பு , அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லக்கூடிய சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 5, 2025
தேனி: 10th போதும்; தேர்வு இல்லாமல் அரசு வேலை

தேனி மக்களே, மத்திய அரசின் அணுசக்தித் துறையில் 405 Apprentice காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 10th, ITI தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <
News November 5, 2025
தேனியில் 5 தாசில்தார்கள் பணியிடமாற்றம்

தேனி மாவட்டத்தில் 5 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார். சுருளி தேர்தல் பிரிவு தாசில்தாரராகவும், செந்தில்குமார் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு தனி தாசில்தாரராகவும், உதயராணி பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாரராகவும், சுந்தர்லால் அலுவலக மேலாளர் (பொது) கலெக்டர் அலுவலகம், சரவணபாபு, ஆதிதிராவிடர் நலம் பிரிவு தனி தாசில்தாரராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News November 5, 2025
தேனி: வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (44). இவரது மகளுக்கு பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் எழுத்தர் வேலை வாங்கி தருவதாக கூறி வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த ராஜகோபால் (42), அவரது நண்பரான கரூர் முருகேசன் (48) ஆகியோர் 2022-ல் ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி பெரியகுளம் போலீசார் ராஜகோபால், முருகேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


