News October 20, 2025

கொடுக்கன் பாளையத்தில் ஆடு திருட முயன்ற இருவர் கைது

image

கொடுக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவருடைய வீட்டில் இன்று (அக்.19) காலை இரண்டு வாலிபர்கள் ஆடுகளை திருடியுள்ளனர். இதனை பார்த்த விஜய், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பிடித்து தர்ம அடி கொடுத்து நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட சொக்கநாதன், மைக்கேல் அகஸ்டின் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News

News October 20, 2025

கடலூர்: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு

image

கடலூர் மாவட்ட தீயணைப்பு நிலைய எண்கள்
1 .கடலூர்- 04142-295101
2. சேத்தியாத்தோப்பு- 04144-244366
3. சிதம்பரம்-04144-238099
4. காட்டுமன்னார்கோவில்- 04144-262101
5. குறிஞ்சிப்பாடி- 04142-258370
6. பண்ருட்டி-04142-242100
7. திட்டக்குடி- 04143-255208
8. ஸ்ரீமுஷ்ணம்- 04144-245201
9. வேப்பூர்- 04143-241229
10. விருத்தாசலம்- 04143-238701
11. கடலூர் SIPCOT-04142-239242
12. நெல்லிக்குப்பம்- 04142-272399

News October 20, 2025

கடலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து நெய்வேலி கொல்லிருப்பு நோக்கி சென்ற வேன் ஒன்று நெய்வேலி சாம்பல் ஏரி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 11 பேர் லேசான காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News October 20, 2025

கடலூர்: வெளுத்து வாங்க போகும் மழை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் வரும் அக்.20 (இன்று), அக்.21 (செவ்வாய்க்கிழமை), அக்.22 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!