News December 8, 2024
கொடி நாள் வசூலை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய படை வீரர் கொடி நாளை முன்னிட்டு முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் நன்கொடை நேற்று துவக்கி வைத்தார். பின்னர் 20 நபர்களுக்கு ரூபாய் 5 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார்.
Similar News
News March 4, 2026
கே.டி.ஆர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான வழக்கு விசாரணையை மார்ச்.13-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
News March 4, 2026
JUST IN விருதுநகர்: முன்னாள் திமுக எம்.பி விடுதலை

ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடியதாக சேத்தூர் போலீஸார் டிராக்டர் ஓட்டுநர் முருகன், தென்காசி திமுக முன்னாள் எம்.பி தனுஷ்குமார் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு ஸ்ரீவியில் உள்ள ஜே.எம் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் இருவரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
News March 3, 2026
விருதுநகர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தபால் அலுவலகத்தில் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் பொன்மகன் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


