News February 13, 2025

கொடிக் கம்பங்களை அகற்ற ஆட்சியர் உத்தரவு

image

தருமபுரி மாவட்டத்தில், நெடுஞ்சாலை, மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி மற்றும் பிற அரசு துறைகளுக்குச் சொந்தமான இடங்கள் பொது இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட தொடர்புடைய அரசியல், மதம் போன்ற அனைத்து அமைப்புகளும், பொது இடங்களில் அனுமதி இல்லாத கொடிக்கம்பங்களையும் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும், கொடி கம்பம் அகற்றவில்லை என்றால் நீதிமன்ற ஆணைப்படி நடடிவக்கை என மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 21, 2025

ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு

image

செங்கல்பட்டை சேர்ந்த முருகேசன் திருக்கழுக்குன்றம் கிராம அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த நிலையில் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்த போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறை மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முருகேசன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2025

மொரப்பூர் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

image

மொரப்பூர் அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்(23). இவர் நேற்று தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்று உள்ளார், அப்போது ஆற்றில் மூழ்கி இறந்துள்ளார். இதுகுறித்து அரூர் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து சென்று ஆற்றில் சடலமாக கிடந்த கிஷோரை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2025

தர்மபுரியில் கோடைகால பயிற்சி முகாம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பில் கோடை கால பயிற்சி முகாம் வருகின்ற 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மே 15 ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மேலும் இந்த பயிற்சி குறித்து விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்தார்.

error: Content is protected !!