News August 18, 2024
கொங்கு நாட்டிற்கு என்ன செய்தார் அண்ணாமலை: ஈஸ்வரன்

சேலத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அத்திகடவு-அவிநாசி திட்டம் கொங்கு நாட்டிற்கு மிகப்பெரிய திட்டமாகும். கொங்கு நாட்டில் பிறந்ததாக சொல்லும் அண்ணாமலை, இதுவரை கொங்கு நாட்டிற்கு ஒரு நல்லது செய்துள்ளாரா? அரசியல் ஆதாயம் தேடுவதையே திறமையாக கொண்டுள்ளார் என விமர்சித்தார்.
Similar News
News July 6, 2025
சேலம் ஜூலை 6 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஜூலை 6 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 9 மணி மாநில அளவிலான தேக்ஹோண்டா போட்டிகள் (பனங்காடு)▶️ காலை 10 மணி சேலம் மாவட்ட குற்றவியல் வழக்குறைஞ்ஞர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் (மாநகராட்சி தொங்கும் பூங்கா) ▶️காலை 10 மணி ஆதி தமிழர் பேரவையின் சார்பில் அருந்ததியர் சமூகம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் விழா (திருவாகவுண்டனூர்)
News July 6, 2025
பெண்களை செல்போனில் படம் பிடித்தவருக்கு தர்மஅடி

சேலம், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் நேற்று காலை காய்கறிகள் வாங்க வந்த பெண்களை, சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செல்போனில் ரகசியமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார், அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 6, 2025
2-வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2-வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 53,027 கனஅடியில் இருந்து 51,401 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 40,000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.