News December 13, 2024

கைவினை கலைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு அரசு”கலைஞர் கைவினை திட்டம்”என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில்,கட்டிட வேலைகள்,நகை செய்தல்,பூட்டு தயாரித்தல் சிற்ப வேலைபாடுகள், பொம்மைகள் தயாரித்தல், கண்ணாடி வேலைபாடுகள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.இந்த திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வம் உள்ள கலைஞர்கள் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்

Similar News

News March 5, 2026

திருச்சி: பால் உற்பத்தியாளர்களுக்கு அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கோடை காலத்தினை முன்னிட்டு, திருச்சி மாவட்ட கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் மூலம் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்படும் பாலிற்கு, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 2 மாதங்களுக்கு மட்டும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்,

News March 5, 2026

விவசாயிகள் வேளாண் பயிர்களை காப்பீடு செய்ய அழைப்பு

image

திருச்சி மாவட்ட விவசாயிகள் 2025-26 ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் நவரை, உளுந்து, சோளம், எள் பயிர்களை மார்ச் 17 மற்றும் கரும்பை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யலாம். இதற்கு கட்டணமாக 1 ஏக்கர், நெல்லுக்கு ரூ.578, சோளத்துக்கு ரூ.234, எள்ளுக்கு ரூ.230, கரும்புக்கு ரூ.3,300ஐ, இ.சேவை மையங்கள், கூட்டுறவு, தேசிய வங்கிகளில் செலுத்தி காப்பீடு செய்யலாம் என வேளாண் இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார்.

News March 5, 2026

திருச்சி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

1.திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3.Toll Free: 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!