News October 1, 2024
கைதி (லாக் அப் டெத்) மரணம்: 3 போலீசாருக்கு விசாரணை

மதுரையைச் சேர்ந்த வெங்கடேசன் திருட்டு வழக்கு தொடர்பாக 2012 ஆம் ஆண்டு எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அப்போது, போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் கிருஷ்ணவேல், ஞானசேகரன், கோதண்டராமன் ஆகிய 3 பேரும் நேற்று(செப்.30) மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகினர். விசாரணை நடத்திய நீதிபதி குமரகுரு வழக்கை வரும் செப்.14-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்
Similar News
News July 11, 2025
இராமேஸ்வரம் – விழுப்புரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

இராமேஸ்வரம் – விழுப்புரம் ரயில் சேவை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்த நிலையில் விழுப்புரம் – ராமேசுவரம் சிறப்பு ரயில் சேவையானது 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக வரும் 12ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை 6 முறைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
இராமநாதபுரம்: ஆசிரியர் வேலை வேண்டுமா?

ராமநாதபுரம் மக்களே, தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஜூலை 10 (நேற்று) முதல் ஆகஸ்ட்12ம் தேதி வரை <
News July 11, 2025
இராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஜூலை11) காலை 10 மணி – பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் (D பிளாக்) நடைபெறும் இம்முகாமில் 20 முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 10 முதல் ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் பங்குபெறலாம். வேலைதேடும் நண்பர்களுக்கு உடனே SHARE செய்யுங்கள்.