News March 20, 2025
கேஸ் பயனாளிகள் வங்கி கணக்கில் ரூ.150 ரூ.300

பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் நடுவே, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் நேற்று பேசும்போது, “தற்போது 2024 அக்டோபர் முதல் ஜனவரி 2025 வரை வாங்கப்பட்ட கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மஞ்சள் நிற அட்டைக்கு ரூ.150 வீதமும், சிகப்பு நிற அட்டைக்கு ரூ.300 வீதமும், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.11.50 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Similar News
News March 21, 2025
நிறுத்தப்பட்ட கேஸ் மானியம் மீண்டும் வழங்கப்படும்

புதுச்சேரி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு நிறுத்தப்பட்ட கேஸ் மானியம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் திருமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த மாதத்தில் இருந்து அனைத்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
News March 21, 2025
சாக்கடை சுத்தம் செய்ய ரூ.140 கோடியில் நவீன இயந்திரங்கள்

புதுச்சேரி முழுவதும் பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டிகளை மனிதர்கள் இன்றி நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை. நகர பகுதியில் Smart city திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யப்படுகிறது. இது முழு வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி முழுவதும் 140 கோடி ரூபாய் செலவில் இதே முறையில் சுத்தம் செய்ய நடவடிக்கை என அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
News March 21, 2025
புதுச்சேரி அரசு சார்பில் 20 லிட்டர் தண்ணீர் இலவசம்

புதுவையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், ”புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏழைகளுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும். மேலும் விரிவான குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதுவரை இந்த இலவச 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.