News February 23, 2026
கேர்மாளம் அருகே யானை தாக்கி விவசாயி பலி

ஈரோடு மாவட்டம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட காடுபசுவன்மாளம் கிராமத்தில், அறுவடை செய்த மக்காச்சோளத்தை பாதுகாத்துக் கொண்டிருந்த விவசாயி மாதேவசாமி காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். நேற்று இரவு நேரிட்ட இந்த சோக சம்பவம் குறித்து வனத்துறையினரும், கடம்பூர் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 1, 2026
கோபி தொகுதியில் திமுக வேட்பாளர் இவரா?

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது விருப்பமனுவை வழங்கினார். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் திரளாக உடனிருந்து அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
News March 1, 2026
ஈரோட்டில் இழந்த பணம்: வட்டியுடன் வழங்கல்!

பவானியில் ‘சன் மைக்ரோ பைனான்ஸ்’ மூலம் கடன் தருவதாகக் கூறி முன்பணம் பெற்று மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 20 பேருக்குப் பணம் மீட்டுத் தரப்பட்டுள்ள நிலையில், மற்ற பயனாளிகளும் உரிய ஆதாரங்களுடன் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என டி.எஸ்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 94981 72888 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
News March 1, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! முக்கிய தகவல்

ஈரோடு மாவட்டத்தில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு, மார்ச் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருட்கள் அவர்களின் இல்லங்களுக்கே வந்து விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை தகுதியுடைய பயனாளிகள் பயன்படுத்தி சிரமமின்றிப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். SHARE IT


