News January 23, 2026
கேரளாவுக்கு மூன்றாவது பக்கம் உள்ளது: PM மோடி

வரவிருக்கும் தேர்தல் கேரளாவின் நிலையையும் திசையையும் மாற்றும் என PM மோடி சூளுரைத்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த பாஜக பேரணியில் பேசிய அவர், கேரளா இதுவரை இரண்டு பக்கங்களை (UDF, LDF) மட்டுமே பார்த்துள்ளது. ஆனால், மூன்றாவதாக ஒரு பக்கம் உள்ளது. அது வளர்ச்சி & நல்லாட்சியை கொண்ட பாஜக என்றார். சபரிமலை தங்கத் திருட்டு விவகாரம் பற்றி பேசிய அவர், இதன் தீவிர விசாரணைக்கு மோடி உத்தரவாதம் தருகிறேன் என்றார்.
Similar News
News February 3, 2026
அண்ணாமலை விலகல்.. நயினார் விளக்கம்

நயினார் மீதான <<19039038>>அதிருப்தியால் <<>>அண்ணாமலை பதவி விலகியதாக செய்திகள் வெளியாகின. தேர்தல் வரவிருக்கும் நிலையில், அவரின் விலகல் அரசியல் ரீதியாக பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து பேசிய நயினார், தந்தை உடல்நிலை காரணம் என அண்ணாமலையே சொல்லிவிட்டபின், ஏன் இப்படி பொய்யான தகவல் வெளியானது என்று எனக்கு தெரியவில்லை. பாஜகவை பொருத்தவரை தனிப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
News February 3, 2026
இன்னும் 5 வருடத்தில் இவை இல்லாமல் போகலாம்!

டெக்னாலஜி என்றும் வளர்ச்சியடைய கூடியதே. ஒரு காலத்தில் அனைவரது வீட்டிலும் இருந்த ரேடியோ இன்று அட்ரஸே இல்லாமல் ஆகிவிட்டது. அப்படித்தான் தற்போது நாம் யூஸ் பண்ணும் பல விஷயங்களும், டெக்னாலஜியின் வளர்ச்சியால் இன்னும் 5 ஆண்டுகளில் வழக்கொழிந்து போகலாம். அவற்றில் சிலவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். வலதுபக்கம் Swipe செய்து பார்க்கவும். காலப்போக்கில் இன்னும் எவையெல்லாம் மறையும் என நினைக்கிறீங்க?
News February 3, 2026
அதிமுக-பாஜக கூட்டணியில் வெளிப்படையாக மோதல்

அதிமுக பாஜக கூட்டணியில் சீட் ஷேரிங் விஷயத்தில் மோதல் வெடித்துள்ளது. தற்போது திமுகவின் கோட்டையாக விளங்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில், அவர்களை எதிர்த்து போட்டியிட பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் 2016-ல் இந்த தொகுதியின் MLA-வாக இருந்த KS.தென்னரசுக்கு இதில் உடன்பாடில்லை. எனவே, ஈரோடு கிழக்கை பாஜகவுக்கு ஒதுக்கினால் அதிமுகவினரே தோற்கடித்துவிடுவார்கள் என அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.


