News March 31, 2025

கேன் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு

image

கோடை காலம் முன்னரே திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். (Share பண்ணுங்க)

Similar News

News April 2, 2025

கல்லூரி மாணவி இறப்பில் மர்மம் 

image

பல்லடத்தைச் சேர்ந்தவர் வித்யா(22). கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்துள்ளார். இந்நிலையில் கடந்த 30ந்தேதி வித்யாவின் பெற்றோர் கோவிலுக்கு சென்ற போது வித்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் புதைத்துவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வித்யா உடலை தோண்டியெடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 1, 2025

திருப்பூரில் கனமழை அறிவிப்பு!

image

திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, திருப்பூர் மாவட்டத்தின் சில இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 4, 5 ஆகிய தேதிகளில், மாவட்டத்தில் சில இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News April 1, 2025

கோடை வெயிலின் கறிக்கோழிகளை காப்பாற்றலாம்

image

பல்லடம் சுற்றுவட்டாரத்தில் விவசாயத்திற்கு மாற்று தொழிலாக கோழிப்பண்ணை தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் கோழிகள் மிகவும் சோர்வடைந்து காணப்படுகின்றன. இதனால் கறிக்கோழிகளின் இறப்பு 5% இருந்து 10% உயர வாய்ப்புள்ளது. இதனை தடுக்க காற்றோட்டமான சூழ்நிலையையும் தண்ணீர் தெளிப்பான்களைக் கொண்டு தண்ணீர் பீச்சி அடித்தும் கோழிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

error: Content is protected !!