News December 26, 2024
கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடிய அமைச்சர்

கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுகள், ஆலயங்களில் கிறிஸ்து பிறப்பு குடில் அமைக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் வாழ்த்துகளை மற்றவர்களுக்கு பரிமாறிக் கொண்டதுடன், கேக் மற்றும் அசைவ உணவுகளையும் பரிமாறி மகிழ்ந்தனர். அதுபோல் ஈரோடு பெரியார்நகரில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, கிறிஸ்தவர்களுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்.
Similar News
News August 15, 2025
ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினவிழா

ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. காலை 9:05 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின், அணிவகுப்பு மரியாதை, சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் கவுரவிப்பு, சிறந்த அரசு பணியாளர்கள் பாராட்டு, நலத்திட்ட உதவி, அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
News August 15, 2025
ஈரோடு: B.E முடித்தால் சூப்பர் வேலை!

ஈரோடு: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள் இந்த <
News August 15, 2025
ஈரோட்டில் பெண்ணிடம் நகை பறிப்பு!

ஈரோடு: பழையபாளையம் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்த நந்தினி கடந்த 25ஆம் தேதி வெளியே சென்ற போது ஒருவர் இவருடைய நகையை பறித்து சென்றார். சூரம்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நகை பறித்த திருடனை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று(ஆக.14) பெங்களூரில் பதுங்கி இருந்த ஜே.பி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (35) என்பவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டு சிறையில் அடைத்தனர்.