News July 8, 2025

கூலி தகராறில் பெயிண்டர் கொலை: ஈரோட்டில் அதிர்ச்சி

image

ஈரோடு, அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஆண்டவர்(55). இவரிடம் வேலை பார்த்து வந்த சதீஷ் (38) என்பவர்,நேற்று முன்தினம் தனக்கு தர வேண்டிய கூலி ₹2,000 கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சதீஷ், ஆண்டவரின் நெஞ்சுப் பகுதியில் அடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ஆண்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை!

Similar News

News August 23, 2025

ஈரோடு: கேஸ் சிலிண்டருக்கு அதிக பணம் கேக்றாங்களா?

image

ஈரோடு மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News August 23, 2025

ஈரோட்டில்ரூ.1,500 உதவித்தொகை வேண்டுமா?

image

ஈரோடு: தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்கள் செப்.,4க்குள் <>www.dge.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பள்ளி தலைமையாசிரியர் அல்லது பள்ளி முதல்வரிடம் விண்ணப்பிக்கலாம். இதில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு மாதம், 1,500 ரூபாய் வீதம் இரு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.SHAREit

News August 23, 2025

பவானிசாகர் மீனவர்கள் அறிவித்த காத்திருப்பு போராட்டம் வாபஸ்

image

பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் குத்தகை உரிமத்தில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவரையும் பங்குதாரர்களாக சேர்க்க கோரி மீனவர்கள் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இந்நிலையில் நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!