News May 28, 2024

கூண்டில் சிக்கிய மரநாய்

image

பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் தற்போது ஒரு சில பழைமையான கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்கள் கடந்த சில நாட்களாக மரநாய்கள் தொல்லை கொடுத்து வந்தன. இதனால் ஊழியர்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி வேளிமலை வனபாதுகாப்பு அதிகாரிகள் மரநாய்களை பிடிக்க நீதிமன்றவளாகத்தில் கூண்டு வைத்தனர். நேற்று சிக்கிய மரநாயை வனத்துறையினர் மீட்டு சென்றனர்.

Similar News

News November 5, 2025

குமரி: காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

image

களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் அணில் என்பவரது மகள் லியா. சிறுமி கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு தனியார் மருத்துவ மையங்களில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி லியா பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆறு காணி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News November 5, 2025

குமரி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News November 5, 2025

குமரி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

✅கூட்டு பட்டா,

✅விற்பனை சான்றிதழ்,

✅நில வரைபடம்,

✅சொத்து வரி ரசீது,

✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

error: Content is protected !!