News November 16, 2024
கூட்டு பாலியல் வழக்கில் சாட்சி விசாரணை

பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நகராட்சி கவுன்சிலர் சிகாமணி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு ராமநாதபுரத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு (நவ.13) விசாரணைக்கு வந்தது. இதில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் நவ. 20 ல் சாட்சிகள் விசாரணை துவங்க நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News March 1, 2026
இராம்நாடு மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க..
இராமநாதபுரம் – 9445000363
இராமேஸ்வரம் – 9445000364
திருவாடானை – 9445000365
பரமக்குடி – 9445000366
முதுகுளத்தூர் – 9445000367
கடலாடி – 9445000368
கமுதி – 9445000369
கீழக்கரை – 9499937032
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க
News March 1, 2026
ராமநாதபுரம்: வீட்ல கரண்ட் இல்லையா.?

ராமநாதபுரம் மக்களே, இந்த மழை நேரத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ்-க்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 94431 11912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.
News March 1, 2026
கச்சத்தீவு எங்களுக்கே சொந்தம் – இலங்கை அமைச்சர் பேட்டி

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி இது சர்வதேச பிரச்சனை என்பதால் வேறு ஏதும் கருத்து சொல்ல முடியாது என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இழுவை படகில் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்கின்றனர். மேலும் இலங்கை மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி மீன்களை அள்ளி செல்கின்றனர். எனவே இலங்கை மீனவர்கள் பாதிக்கின்றனர் என்றார்.


