News November 17, 2025
கூட்டணி குறித்து பேசவில்லை: ஆர்.பி.உதயகுமார்

மனிதாபிமான அடிப்படையிலேயே <<18310780>>பிரேமலதாவை<<>> சந்தித்ததாக ஆர்.பி.உதயகுமார் விளக்கமளித்துள்ளார். தனது தாயார் மறைந்த போது பிரேமலதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதாகவும், அதுபோலவே அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும், அதுபற்றி EPS முடிவெடுத்து அறிவிப்பார் எனவும் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
Similar News
News November 17, 2025
BREAKING: நாளை விடுமுறை இல்லை… அறிவித்தது அரசு

SIR பணிகளை புறக்கணித்து <<18309481>>நாளை போராட்டத்தில் <<>>ஈடுபடவுள்ளதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மருத்துவ விடுப்பை தவிர்த்து வேறு எதற்காகவும் விடுப்பு எடுக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
ரஜினியிடம் பேய் கதை கூறிய சுந்தர்.சி ?

ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி விலகியது தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி கூறிய பேய் கதையின் முழு script ரஜினிக்கு பிடிக்காமல் போனதாலேயே அவர் விலகியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பேய் கதையை சுந்தர்.சி, 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே சந்தானம் மற்றும் விஜய் சேதுபதியிடம் சொல்லியதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி எந்த மாதிரியான கதைக்களத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?
News November 17, 2025
உங்களுக்கு IT நோட்டீஸ் வராம இருக்கணுமா?

உங்களை தேடி IT நோட்டீஸ் வருவதை தவிர்க்க, இந்த Limits-ஐ மீறாதீர்: *ஆவணம் இன்றி பணப்பரிசு Limit: ₹50,000 *ஒரே நாளில் ஒருவரிடம் இருந்து பணம்பெறும் Limit: ₹2 லட்சம் *ஒரே நாளில் சேமிப்பு கணக்கில் கேஷ் டெபாசிட் Limit: ₹10 லட்சம் *ஒரே நாளில் கரன்ட் அக்கவுன்ட்டில் டெபாசிட் Limit: ₹50 லட்சம் *கிரெடிட் கார்டுக்கு ஒரே நாளில் ரொக்கமாக செலுத்தும் Limit: ₹1 லட்சம் *சொத்து விற்பனை Limit: ₹30 லட்சம்.


