News March 20, 2026
கூட்டணியில் இணைந்தார் ராமதாஸ்.. அரசியல் திருப்பம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து களம் காண இருப்பதாக ராமதாஸ் – சசிகலா இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். தைலாபுரத்தில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் ஒன்றாக தேர்தலை சந்திக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2026
CPI வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், அத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
*தளி – ராமச்சந்திரன்
*திருத்துறைப்பூண்டி (தனி) – மாரிமுத்து
*ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – மகாலிங்கம்
*திருப்பூர் வடக்கு – ரவி
*பவானிசாகர் (தனி) – பி.எல்.சுந்தரம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
News March 29, 2026
இளைஞர்களுக்கு மாதம் ₹8,000.. விஜய் வாக்குறுதி

இளைஞர்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகளை விஜய் வெளியிட்டுள்ளார். அதில், *5 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி; இதில், டிகிரி படித்தவர்களுக்கு மாதந்தோறும் ₹10,000, ITI படித்தவர்களுக்கு ₹8,000 சம்பளம். *நேர்மையான தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் ₹25 லட்சம் பிணையில்லா கடன். *TNPSC, TRB, TNEB-களில் காலதாமதம் இல்லாமல் போட்டி தேர்வுகள். *தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
பிரிசில்லா பாண்டியன் போட்டி: வியூகம் கைகொடுக்குமா?

அதிமுக கூட்டணியில் தமமுகவுக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இத்தொகுதியில் பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் பொதுத் தொகுதி என்பதால், தனது மனைவியின் சமூக வாக்கை கருத்தில்கொண்டு ஜான் பாண்டியன் இந்த முடிவை எடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.


