News November 5, 2024
கூடுதலாக 700 மகளிர் இலவச பேருந்துகள் இயக்க முடிவு

சென்னை மகளிர் இலவச பயணத்திற்கு வசதியாக, கூடுதலாக 700 டீலக்ஸ் பேருந்துகள் பிங்க் நிறத்திற்கு மாற்றப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில், பல்வேறு வழித்தடங்களில் 3,376 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு நாளும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து?
Similar News
News September 11, 2025
சென்னையில் 6 மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை சென்ட்ரல்-கூடுர் பிரிவில் எண்ணூர்-அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 6 மின்சார ரெயில்கள் முழுவதும் இன்று இரவு 10.30 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும்.
News September 11, 2025
சென்னை மெட்ரோ பச்சை வழித்தட சேவையில் தற்காலிக மாற்றம்

மெட்ரோ ரயில் 2ம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக, பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை (செப்.15 -19) வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, காலை 5 மணி முதல் 6 மணி வரை இந்தப் பகுதியில் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 6 மணி முதல் வழக்கமான அட்டவணைப்படி சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
பூவை ஜெகன் மூர்த்தி கடத்தல் வழக்கு ஒத்திவைப்பு

சிறுவனை கடத்தியதாக பூவை ஜெகன்மூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பெண்ணின் தந்தை வனராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், தற்போது சமரசம் ஏற்பட்டு திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது வழக்கு விசாரணை செப்.17 ஒத்திவைக்கப்பட்டது.