News October 19, 2025
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம்

கூடலூர் வனச்சரக பகுதியில் ஓவேலி விசாலாட்சி எஸ்டேட் , பூதிமட்டம், செலுக்காடி , கோல்கேட் , கனியன்வயல் புளியம்பாறை ஆகிய பகுதிகளில் தலா ஒரு யானை நடமாட்டம் உள்ளது. கொட்டாய்மட்டம் பகுதியில் மூன்று யானைகள் , மாக்கமூலா பகுதியில் இரண்டு ஆண் யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. வனத்துறையின் இரவு ரோந்து போடப்பட்டுள்ளது பொதுமக்கள் அவசர தேவைக்கு- 9486036467, 6382751734 தொடர்பு கொள்ள வனத்துறை அறிவித்துள்ளது.
Similar News
News October 19, 2025
நீலகிரி மக்களே அவசியம் பாருங்க!

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை <
News October 19, 2025
நீலகிரி மக்களே இன்று கவனம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்படுள்ளது. வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும். அதிகம் SHARE பண்ணுங்க!
News October 18, 2025
நீலகிரி: நீதிமன்றம் உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, சுப்பிரமணிய கவுசிக் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பிளாஸ்டிக்கிற்கு பதில் வேறு பொருட்களை பயன்படுத்துவது குறித்து நவ. 21ம் தேதிக்குள் நிறுவனங்களுடன் கலந்தலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.