News March 4, 2026

குஷியில் மதுராந்தகம் மக்கள்!

image

மதுராந்தகத்தில் 2.10 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு பிப்ரவரி 2024ம் வருடம் பூமி பூஜை போடப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட வேலை தொடங்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற இருக்கிறது. பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

Similar News

News March 5, 2026

செங்கல்பட்டில் நிறம் மாறும் தொகுதி!

image

திருப்போரூரில் கடந்த 2021 தேர்தலில் வி.சி.க-வின் எஸ்.எஸ்.பாலாஜி வெறும் 1,947 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அதாவது, மிகவும் நூலிழையில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட தொகுதி. IT நிறுவனங்கள் ஒருபுறம், கிராமப்புற விவசாய நிலங்கள் மறுபுறம் என இருவேறு துருவங்களைக் கொண்ட தொகுதி. பா.ம.க மற்றும் வி.சி.க ஆகிய இரு கட்சிகளுமே இங்கு சம பலத்துடன் இருப்பதால், ஒவ்வொரு தேர்தலிலும் இங்கு அனல் பறக்கும்.

News March 5, 2026

செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ரயில் மோதி உடல் தூக்கி வீசப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த தாம் பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த ஆண் நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

News March 5, 2026

செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

image

செங்கல்பட்டு பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை காவல்துறையினரின் சிறப்பு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்கள் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர எணை டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!