News March 2, 2025

குவாரி விதிமுறை மீறல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகளை வட்டார அளவிலான கண்காணிப்பு குழுக்களில் இடம்பெற்றவர்களை கொண்டு தொடர்ந்து கண்காணித்து விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சுஹாதா ரஹிமா அறிவுறுத்தியுள்ளார். மேலும் குவாரி குத்தகைதாரர் அவருக்கு வழங்கப்பட்ட உரிமத்தை யாருக்கும் உள்குத்தகைக்கு விட்டுள்ளார்களா என்பதையும் கண்காணித்து அறிக்கை அளிக்க உத்தரவு.

Similar News

News August 25, 2025

விருதுநகர் மக்களே, பிரச்சனையா? உடனே கால் பண்ணுங்க!

image

விருதுநகர் மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 9791322979 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட அறை கட்டுப்பாட்டு உதவி எண் – 1077. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News August 25, 2025

கடன் தொல்லையால் ஓட்டுநர் தற்கொலை

image

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த பாண்டி(33) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். டிரைவர் பாண்டி குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதியடைந்து வந்த நிலையில் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News August 24, 2025

BREAKING சாத்தூர் அருகே விபத்தில் 35 பேர் காயம்

image

கழுகுமலை பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இருக்கன்குடிக்கு மொட்டை எடுப்பதற்காக சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது கோவில்பட்டி – நல்லி சத்திரத்திற்கு இடையே நெடுஞ்சாலையில் டயர் வெடித்து வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உட்பட 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கோவில்பட்டி, தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!