News September 14, 2024
குழித்துறை நகராட்சியில் ஓணம் சிறப்பு நிகழ்ச்சி

கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை குமரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமையில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகள் இன்று (செப்.13) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
Similar News
News October 20, 2025
குமரி மக்களே இனி அலைச்சல் இல்லை.!

குமரி மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!
News October 20, 2025
கனமழை எச்சரிக்கை – தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்

குமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையினால் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளை அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News October 20, 2025
குமரி: மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை

தக்கலை அருகே ஆற்றுக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் சரியாக வேலைக்குச் செல்லவில்லை. மனைவியிடம் குடிக்க பணம் கேட்ட நிலையில், அவர் கொடுக்காததால் வீட்டில் மணிகண்டன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.