News September 14, 2025

குழந்தை பிறந்தவுடன் தாய் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

image

நாமக்கல் மாவட்டம் வரகூர் பகுதியை சேர்ந்த அபிமன்யுவின் மனைவி சுஷ்மிதா, நிறைமாத கர்ப்பிணியான இவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆண் குழந்தை பெற்றார். பிறகு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அபிமன்யு அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 14, 2025

கரூர்: திருடப்பட்ட பணத்தை மீட்பது ஈஸி!

image

கரூர் மக்களே உங்களுடைய யுபிஐ, வங்கி கணக்கு, ஆன்லைனில் பணம் மோசடி நடந்தது தெரிந்தால், திருடிய மர்ம கும்பலின் வங்கி கணக்கிற்கு மாறிய பணத்தை அவர்களால் எடுக்க முடியாமல் தடுக்க முடியும். அதற்கு நீங்கள் 24மணி நேரத்திற்கு 1930 இந்த எண்களில் புகார் அளிக்கவும். மேலும், https://cybercrime.gov.in/ என்ற முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம். இதை மற்றவர்களுக்கு உடனடியாக ஷேர் செய்யவும்.

News September 14, 2025

கரூர் மக்களே இனி அலைய வேண்டாம்!

image

கரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News September 14, 2025

கரூர்: இரிடியம் விற்பனை ரூ.65லட்சம் மோசடி

image

கரூர், வெங்கமேட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஷாஜகான் (65), இவரிடம் இரிடியம் வியாபாரத்தில் அதிக லாபம் தருவதாக ஞானபிரகாசம் ரூ. 65லட்சம் மோசடி செய்துள்ளார். ஞானபிரகாசம் மற்றும் அவரது மனைவிகள் ஜான்சி ராணி (50) அருள் செல்வி (48), திருநெல்வேலியை சேர்ந்த பேச்சிமுத்து (52) ஆகிய 4பேரை சி.பி. சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடல்.

error: Content is protected !!