News April 17, 2025

குழந்தை பாக்கியம் கிடைக்க சிறப்பான கோயில்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோவில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சாமி தரிசனம் செய்தால் குழந்தைப்பேர் கிடைக்குமென்று சிறப்பும் உள்ளது, குழந்தை தடை உள்ளவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.

Similar News

News April 19, 2025

கைவினைத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி வைக்கிறார். குன்றத்தூரில் நடைபெறும் இந்த விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும், 8,951 கைவினைத் தொழில் முனைவோருக்கு ரூ.170 கோடி கடன் மற்றும் ரூ.34 கோடி மானியம் வழங்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சிறிது நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

News April 19, 2025

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

image

இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் எளிதாக விண்ணப்பிக்க, காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு இடங்களில் இன்று (ஏப்ரல் 19) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் நாளை மின்தடை

image

ஸ்ரீபெரும்புதுாரில் நாளை (ஏப்ரல் 20) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால், மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், NGO காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம், வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் (9AM – 5PM) மின்தடை ஏற்படும்.

error: Content is protected !!