News October 10, 2024
குழந்தை தொழிலாளர் குறித்து காவல்துறை விழிப்புணர்வு பதிவு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில். குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் “குழந்தைகள் அறிவை சம்பாதிக்கட்டும், பணத்தை அல்ல” குழந்தை தொழிலாளர்களை பற்றி தகவல் தெரிந்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News July 10, 2025
திருப்பத்தூர்: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டபட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வார்கள். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (04179222111) அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க. <<17015887>>தொடர்ச்சி<<>>
News July 10, 2025
கலைஞர் கனவு இல்லத் திட்ட விவரங்கள்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*
News July 10, 2025
திருப்பத்தூர் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) முதல் மாற்றுத்திறனாளிகளின் முழுமையான விவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்தரவல்லி தெரிவித்துள்ளார். இப்பணியின் மூலம், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் அவர்களது இல்லம் தேடி செல்வதற்கான புதிய முயற்சியாகும். மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகநலத்துறை இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றன.