News March 28, 2025

குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை

image

மண்ணடி, லிங்குச் செட்டி தெருவைச் சேர்ந்தவர் அக்ரம் ஜாவித் (33). இவருக்கு 2.5 வயதில் பாஹிமா என்ற பெண் குழந்தை உள்ளது. இவருக்கு, தனது மனைவி நிலோபரின் நடத்தையில் கடந்த சில தினங்களாக சந்தேகம் இருந்துள்ளாது. அதனால், கடந்த 2 தினங்களுக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியுளார். இதை கண்டுபிடித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 9, 2025

SIR – திமுக சார்பில் வார் ரூம் அமைப்பு

image

சென்னையில் SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சந்தேகங்களை தீர்க்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தை விட திமுக தான் அதிக களப்பணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் 8065420020 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

News November 9, 2025

சென்னையில் சீருடை பணியாளர் தேர்வு

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பதவிக்கான பொது தேர்வு இன்று எழுத்து தேர்வாக நடைபெற்றது. சென்னையில்10 மையங்களில் 1,772 பெண்கள் உட்பட 8,090 பேர் தேர்வு எழுதியனர். கமிஷனர் அருண் தலைமையில், துணை மற்றும் உதவி ஆணையாளர்கள், பறக்கும் படையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தேர்வு அமைதியாக நடைபெற்றது.

News November 9, 2025

சென்னை: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுக*

error: Content is protected !!