News May 10, 2024
குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணா்வு

திருவாரூா் ரயில் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் நேற்று வழங்கப்பட்டன. அட்சய திருதியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் ரயில் பயணிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டன.
Similar News
News September 1, 2025
திருவாரூர்: இதனை அறிந்திருப்பது மிக நல்லது!

திருவாரூர் மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதியானவை, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், வாங்கிய பொருளின் Bill-யை வைத்து சட்டப்படி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் உரிய இழப்பீடு பெற முடியும். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!
News September 1, 2025
திருவாரூர்: தெரு நாய்கள் தொல்லையா? இத செங்க!

தமிழகத்தில் அண்மைக்காலமாகத் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களைக் கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம் உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!
News September 1, 2025
எட்டு வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கவின் என்பவர் வீட்டிற்கு அருகே விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த பாம்பு சிறுவனை கடித்தது. இதையடுத்து உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.