News July 13, 2024
குழந்தைகள் பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டம்

குமரி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறு கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 8, 2025
குமரி: இளம் பெண் தற்கொலை

கீழமறவன் குடியிருப்பு டெம்போ டிரைவர் செல்வசரண் மற்றும் ரேஷ்மா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். கடந்த நவ.6ம்தேதி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ரேஷ்மா ராஜபாளையத்தில் உள்ள தனது தாயாருக்கு செல்போனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக்கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுக்குறித்து கோட்டார் போலீசார் விசாரணை.
News November 8, 2025
குமரி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 8, 2025
குமரியில் கிடுகிடுவென உயர்ந்த தேங்காய் விலை

குமரி மாவட்டத்தில் ஈத்தாமொழி தேங்காய் மிகவும் பிரபலம் ஆகும். குமரி மாவட்டத்தில் பெரும்பாலான சமையல் தேங்காய் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. சந்தையில் கடந்த மாதம் வரை கிலோ ரூ. 55 க்கு விற்பனையான தேங்காய் தற்போது ரூ. 65 விலையில் விற்கப்பட்டுகிறது. சில்லறை கடைகளில் ரூ.68 வரை விலைக்கு போகிறது. தேங்காய் விளைச்சல் குறைந்ததால் வரத்து குறைகிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் கூறினார்.


