News July 25, 2024
குழந்தைகளை மற்றவருடன் ஒப்பீடு செய்யாதீர்

தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். ஒப்பீடு என்பது ஆபத்தானது. மற்றவருடன் ஒப்பீடு செய்வதன் மூலம் போட்டி, பொறாமை, தற்கொலை செய்யும் எண்ணங்கள் ஏற்படும்” என அவர் தெரிவித்தார்.
Similar News
News August 14, 2025
கும்பகோணத்தில் மகாமகம் பெருவிழா முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

கோவில் நகரமான குடந்தையில் நடைபெற இருக்கும் புகழ் பெற்ற விழாவான மகாமகம் திருவிழா 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அந்த விழாவிற்கு தேவையான முன்னேறுபாடுகள் பற்றி இன்று (ஆகஸ்ட் 13) கும்பகோணம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை கலெக்டர். பிரியங்கா பங்கஜம் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.
News August 13, 2025
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது

தஞ்சாவூர் மாதாகோட்டையில் இருசக்கர வாகனம் மீது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கார் மோதியதில் தஞ்சை சேர்ந்த அறிவழகன், பவ்யா ஸ்ரீ, தேஜா ஸ்ரீ ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் முகமது ரியாஸ் (32) என்பவரை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 13, 2025
தஞ்சை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? Check பண்ணுங்க!

தஞ்சை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <