News December 29, 2025
குளோப் சாக்கர் விருதுடன் ரொனால்டோ

துபாயில் நடந்த குளோப் சாக்கர் விருது நிகழ்ச்சியில் நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதாவது, இந்த ஆண்டின் தலைசிறந்த மத்திய கிழக்கு வீரருக்கான குளோப் சாக்கர் விருது ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அவர், 40 வயதானாலும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே ஆசை என்றும், சர்வதேச அளவில் 1,000 கோல்களை அடிக்க வேண்டும் என்ற கனவை நோக்கி பயணிப்பதாகவும் கூறினார்.
Similar News
News December 30, 2025
2025 REWIND: தமிழகத்தை உலுக்கிய குற்ற சம்பவங்கள்

கொலைகளும் குற்றங்களும் காலத்தின் தவிர்க்க முடியாத பக்கங்களில் இடம்பிடித்து வருகின்றன. இதற்கு 2025-ம் ஆண்டும் விதிவிலக்கல்ல. இந்தாண்டில் தமிழகத்தை அதிர வைத்த குற்ற சம்பவங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல் வேறு ஏதேனும் குற்ற சம்பவங்கள் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. SHARE
News December 30, 2025
நடிகை நந்தினி மரணம்.. கண்ணீர் அஞ்சலி

நடிகை நந்தினியின் தற்கொலை சின்னத்திரை நடிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு, சக நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நந்தினியுடன் ஷூட்டிங்கில் எடுத்த போட்டோக்களை SM-ல் பகிர்ந்து நடிகை ஸ்வேதா சுப்பிரமணியன் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், நீ(நந்தினி) எப்போதும் எங்களது இதயங்களில் வாழ்வாய் என சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார். (போட்டோக்களை மேலே ஸ்வைப் செய்து பாருங்க)
News December 30, 2025
இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது: விஜய்

திருத்தணியில் வடமாநில இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருள்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என்றும் விமர்சித்துள்ளார்.


