News July 9, 2025
குளித்தலை: நீதிமன்றம் எதிரே திட்டிய நபர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ சிந்தலவாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 23. இவர் குளித்தலை கோர்ட் எதிரே உள்ள மெயின் ரோட்டில் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்தார். போலீசார் எச்சரித்தும் கேட்காததால் மணிகண்டன் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
சிந்தலவாடி யோக நரசிம்ம சுவாமி கோயில்!

கரூர், கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடியில் புகழ்பெற்ற யோக நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News July 8, 2025
கரூா்: 18 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு

கரூர், ஜூலை 12ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 65 மையங்களில், 18 ஆயிரத்து 30 போ் தேர்வு எழுத உள்ளனா். இந்த தேர்வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கூடத்தில் அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். காலை 9 மணிக்கு மேல் மையங்களுக்குள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
கரூருக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி நிரல்

ஜூலை 9ஆம் கரூருக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ழ்சி நிரல் ▶️காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம், ▶️11:30 மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடல்▶️12:30 கரூர் பிரேம் மஹாலில் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை ▶️மாலை 5 மணி திருமாநிலையூர் பேருந்து திறப்பு மற்றும் நலத்திட்டம் ▶️மாலை 6 மணிக்கு ராயனூர் தளபதி திடலில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்