News December 17, 2025

குளித்தலை அருகே வசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணேசபுரம் பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட லாலாபேட்டையை சேர்ந்த முருகானந்தம் 57, பாஸ்கர் 26, அருண் 25 ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 52 சீட்டுகள் மற்றும் ரூபாய் 500 பறிமுதல் செய்தனர்

Similar News

News December 17, 2025

கரூர்: நேருக்கு நேர் மோதி விபத்து!

image

கரூர் மாவட்டம் சுங்ககேட் சாலை வளைவில், யுவனேஸ்வரன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் சூர்யா என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகன மோதியதில், யுவனேஸ்வரன் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து நேற்று தான்தோன்றி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News December 17, 2025

கரூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 17, 2025

கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் டிச.27 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 3.00மணி வரை தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு துறைகள் இணைத்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கரூர் V செந்தில்பாலாஜி தலைமையில் முகாம் நடைபெற உள்ளது. இதில் 200 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். SHARE IT

error: Content is protected !!