News December 27, 2025
குளித்தலையில் அதிரடி கைது!

குளித்தலை கோட்டம் பாலவிடுதி மற்றும் குளித்தலை காவல் நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் லாட்டரி சீட்டு விற்ற பாலவிடுதியை சேர்ந்த கருப்பசாமி (62), குளித்தலையை சேர்ந்த செந்தில்குமார் (51) ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 27, 2025
கரூர்: நீங்க கேன் தண்ணீர் குடிக்கிறிங்களா?

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News December 27, 2025
கரூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 27, 2025
கரூரில் வேலை வேண்டுமா? கலெக்டர் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் (27.12.2025) இடம் அரசு கலைக்கல்லூரி தான்தோன்றிமலை, கரூரில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளவிரும்பும் வேலை தேடும் இளைஞர்கள் கீழ்கண்ட படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளவும். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.தொடர்புக்கு – 04324-223555, 9345261136


