News December 16, 2025
குலசேகரம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திற்பரப்பு தேனீ வளர்ப்பு தொழிலாளி தீபுவின் மகன் அபிஷேக் (17)
பைக் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாடியிலுள்ள தனது அறையில் தூங்கச் சென்றுள்ளார். இன்று காலையில் தாயார் கவிதா டீ கொடுக்க அவரது அறைக்கு சென்ற போது அபிஷேக் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
Similar News
News December 19, 2025
குமரியில் அதிமுக கவுன்சிலர் கைது!

கடையாலுமூடு அருகே களியலில் அனுமதியின்றி இயங்கிய குவாரியில் நேற்று முன் தினம் மாவட்ட SP ஸ்டாலின் சோதனை மேற்கொண்டார். அங்கு பணியில் இருந்த கடையாலுமூடு அதிமுக கவுன்சிலர் ஸ்டாலின் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நில உரிமையாளர், குவாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், குவாரி செயல்பட உடந்தையாக இருந்த கடையாலுமூடு போலீசார் 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
News December 19, 2025
குமரி: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <
News December 19, 2025
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி

குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓவியப்போட்டி குமரி மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்படுகிறது. ரூ.15000, ரூ.10000, ரூ7500 என பரிசுகள் வழங்கப்படுகிறது. ஓவியத்தை ஜன.5.ம் தேதிக்குள் நாகர்கோவில், குமரி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் ஆகிய போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கலாம் என குமரி மாவட்ட எஸ்.பி தகவல் தொிவித்துள்ளார்.


